Header Ads

Breaking News
recent

நெட் தேர்வு 30 ஆயிரம் பேர் எழுதினர்

சென்னை :
நாடு முழுவதும் 89 நகரங்களில் நேற்று  நெட் தேர்வு நடந்தது. தமிழகத்தில் இந்த தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி  ஆகிய இடங்களில் நடந்தது. முதல் தாள், இரண்டாம் தாள் தலா 100 மதிப்பெண்கள் கொண்டது. 3ம் தாள்  150 மதிப்பெண் கொண்டது.
 முதல் தாள்  காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.45க்கு முடிந்தது. இதில் 60 கேள்விகள் இடம் பெற்றன. இரண்டாம்தாள் தேர்வு 11.15க்கு தொடங்கி 12.30க்கு  முடிந்தது. 50 கட்டாய கேள்விகள் இடம் பெற்றன. 3ம் தாள் தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.30க்கு முடிந்தது.  இந்த தேர்வில்  தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் எழுதினர்.

No comments:

Powered by Blogger.