அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்புக்கு ரேண்டம் எண் வெளியீடு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் 150 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 80 இடங்களும் உள்ளது. இந்த படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 22ம்தேதி வரை பெறப்பட்டது.
எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கு 5940 விண்ணப்பங்களும், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு 1438 விண்ணப்பங்களும் பெறப்பட்டது. மாணவர்கள் மேல்நிலைக்கல்வி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட உள்ளனர்.
இதையொட்டி பல்கலைக்கழக துணைவேந்தர் மணியன் நேற்று ரேண்டம் எண்களை வெளியிட்டார். கலந்தாய்விற்கான அழைப்பு தபால் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பி வைக்கப்படும். இதுபற்றிய விபரங்களை பல்கலைக்கழக இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூலை மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
No comments: