Header Ads

Breaking News
recent

செவிலியர் பட்டயப் படிப்பு கலந்தாய்வு இன்று நிறைவு

செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நிறைவடைகிறது. மூன்றாவது நாளான புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் மொத்தம் 1,449 இடங்கள் நிரம்பியுள்ளன. 551 காலியிடங்கள் உள்ளன.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 23 அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் மொத்தம் 2,000 இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

அறிவியல் பாடப் பிரிவில் பயின்றவர்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 605 இடங்கள் நிரம்பின. மூன்றாவது நாள் கலந்தாய்வின் முடிவில் மொத்தம் 1,449 இடங்கள் நிரம்பியுள்ளன.

அறிவியல் பாடம் எடுத்துப் பயின்ற மாணவர்களுக்குத் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு ஒரு நாளைக்கு சுமார் 600 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

காலியாக உள்ள 551 இடங்களுக்கு வியாழக்கிழமை கலந்தாய்வு நடைபெறும் என தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்ற பின்னர் ஏற்படும் காலி இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Powered by Blogger.