Header Ads

Breaking News
recent

தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

 தமிழ் நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. 

தொழிற்பயிற்சி கல்வி, மேனிலைக் கல்வி படிக்கும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 10 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.  மேற்கண்ட கல்வி உதவித் தொகை பெற விரும்புவோர் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ண்ப்பிக்க வேண்டும். ‘செய லாளர், தமிழ்நாடு தொழி லாளர் நல வாரியம், த.பெ.எண் 718, தேனாம்பேட்டை, சென்னை6’ என்ற முகவரிக்கு சுயவிலாசமிட்ட தபால் தலை ஒட்டிய உறையுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

No comments:

Powered by Blogger.