மகளிர் பொறியியல் கல்லூரியில் பயிரலங்கம்

நிகழ்ச்சிக்கு முதல்வர் த.சசிரேகா தலைமை வகித்தார்.
கல்லூரி செயலாளர் அருணாஅசோக் குத்துவிளக்கேற்றி பயிலரங்கத்தை தொடக்கிவைத்தார்.
ஒருங்கிணைப்பாளர் ப.கனகா அறிமுகஉரையாற்றினார்.
மதுரை அருங்காட்சியகத்தின் துணை இயக்குனர்(ஓய்வு)முனைவர் சொ.சாந்தலிங்கம், தமிழ் எழுத்துக்கள் தோற்றமும் வளர்ச்சியும் மற்றும் சோழர்காலதமிழ் எழுத்துக்கள் என்ற தலைப்பில் பேசினார்.தஞ்சாவூர் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துரையின் சுவடிப்புலத்தலைவர் முனைவர் சு.இராசவேலு, இந்திய எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பிலும், கோவை தொல்லியல்துறை உதவி இயக்குனர்(ஓய்வு) முனைவர் இரா.பூங்குன்றன்,வட்டெழுத்து வளர்ச்சியும் பல்லவர்கால எழுத்துக்களும் என்ற தலைப்பிலும், மேலூர் அரசு கலைகல்லூரி உதவிப் பேராசிரியர் அம்பை மணிவண்ணன் கல்வெட்டுக்களில் இடம்பெறும் செய்திகள் என்ற தலைப்பிலும் பேசினார்கள்.
முனைவர் பா.பொன்னி நன்றி கூறினார்.
No comments: