Header Ads

Breaking News
recent

தமிழிசைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழிசைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
   இந்தப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறை சார்பில் தென்னாப்பிரிக்க ரெங்கசாமி பிள்ளை அறக்கட்டளையின் தமிழிசைப் போட்டி வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
   இதில், 13 மாணவர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர் அனந்தராமன் முதலிடத்தையும், யாகப்பா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி சுருதி இரண்டாமிடத்தையும், திருச்சி இசைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் பார்த்தசாரதி, சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர் சுமதிபிரியா மூன்றாமிடத்தையும் பெற்றனர்   பின்னர், மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் . திருமலை பரிசு வழங்கினார்.
   இசை அறிஞர் கீதா சுந்தரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   முன்னதாக, இசைத் துறைத் தலைவர் . அங்கயற்கண்ணி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் இரா. மாதவி நன்றி கூறினார்.

No comments:

Powered by Blogger.