பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகள் பயிற்சி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சிறுவர்களுக்கான சாலை விதிகள் பயிற்சிப் பூங்காவில் பள்ளி மாணவர்களுக்கான சாலை விதிகள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், மாநகரக் காவல் துறை, அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் இளையோர் எக்ஸ்னோரா ஆகியவை இணைந்து இந்த பயிற்சியை நடத்துகின்றன. வரும் 26ஆம் தேதி வரை 13 நாள்கள் இந்த முகாம் நடைபெறவுள்ளது. இதில் 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.
கடந்த 14 ஆண்டுகளாக நடைபெறும் இந்தப் பயிற்சியில் இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றுள்ளனர். செய்தி மக்கள் தொடர்புத் துறை உதவி இயக்குநர் க. முத்துசாமி முகாமைத் தொடங்கி வைத்தார்.
அரசுப் போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் (தொழில் பிரிவு) சந்தானம், துணை மேலாளர் (பயிற்சி) எம். பிரபாகரன், காவல் உதவி ஆணையர் (போக்குவரத்து) விக்னேஸ்வரன், இளையோர் எக்ஸ்னோரா மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments: