Tuesday, June 17 2025

Header Ads

ஐடிஐ படித்தவர்களுக்கு அபுதாபியில் வேலைவாய்ப்பு

திருவாரூர் மாவட்டத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு அபுதாபியி ல் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஐடிஐ தேர்ச்சியுடன் 6 ஆண்டு பணி அனுபவம் பெற்ற சட்டரிங் கார்பெண்டர்கள், ஸ்டீல் பிக்ஸ்சர்கள், ஏசி டெக்னிசியன்க ள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்ற உதவி சட் டர்ங் கார்பெண்டர்கள், உதவி ஸ்டீல் பிக்ஸ்சாóகளுக்கான நேர்முகத் தேர்வு தமிழக அரசு நிறுவன அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெற உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்துக்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான பயணச்சீட்டு, இருப்பிடம், உணவு, மருத்துவ காப்புறுதி, மிகைநேர பணி ஊதியம் ஆகியவை வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.

விரும்புவோர் சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், நீலநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட 3 மார்பளவு புகைப் படங்கள், பாஸ்போர்ட் மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றுடன் வேலைவாய்ப்பு வளாக எண் 42, ஆலந்தூர் ரோடு, கிண்டி, சென்னை என்ற முகவரியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நாளை (ஜூலை 19) காலை 8.30 மணிக்கு சென்று நேர்க்காணலில் பங்கேற்று பயன் பெறலாம்.

No comments:

Powered by Blogger.