பாலிடெக்கினிக்கில் மாணவர் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்
சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்கினிக்கில் மாணவர் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்வர் நந்தகுமார் தலைமை வகித்தார்.
ராம்கோ சிமின்ட் ஆலை நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துணை அலுவலர் பிரசன்ன வெங்கடேஷ் சிறப்புறையாற்றி பேசியதாவது:
வேலைக்கு விண்ணபிக்கும்போது, நீங்கள் தயாரிக்கும் சுபயவிபர பட்டியலே உங்களை அடையாளம் காட்டும் என்பதால் , அதனை தயாரிப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.தகவல் தொடர்பு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். தினசரி தமிழ், ஆங்கிய பத்திரிக்கைகளை வாசிக்க வேண்டும்.நேர்காணலின் போது கூச்சமில்லாமல் செயல்பட வேண்டும் என்றார். விரிவுரையாளர் புகழ் நன்றி கூறினார்.
No comments: