Header Ads

Breaking News
recent

திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு



முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 21ம் தேதி துவங்க உள்ளது.
இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு முதல் கட்ட கலந்தாய்வு இம்மாதம் 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு)முனைவர் உஷாரகோத்தம் தலைமையில் நடந்தது.எஞ்சியுள்ள காலி இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு இம்மாதம் 21ம் தேதி காலை 10 மணி அளவில் கல்லூரியில் உள்ள நல்லியக்கோடன் அரங்கில் நடைபெற உள்ளது.இது குறித்து கல்லூரி முதல்வர்(பொறுப்பு) முனைவர் உஷாரகோத்தமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
முதலாமாண்டு சேர்க்கைக்கு விண்ணபித்த அனைத்து பிற்ப்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளும்,கணிதம் உள்ளிட்ட மூன்றாம் பாடப்பிரிவில் 800 மதிப்பெண்களுக்கு 350 முதல் 400 மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிறப்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் 450 முதல் 500 வரை மதிப்பெண்கள் பெற்ற மாணவியர்களும்,350 முதல் 400 வரை மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் 350 முதல் 415 வரை பெற்ற மாணவியர்களும்,மற்றும் கணிதம் அல்லாத அறிவியல் பிரிவில் 370 முதல் 400 வரை மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள்,ஆங்கில பாடத்தில் 100 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளும் இக்கலந்தாயிவில் கலந்து கொள்ளலாம்.
 மேலும் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அசல் சான்றிதழ்,புகைப்படம்,சான்றிதழ்களின் இரண்டு ஒளி நகல்கள் மற்றும் கல்லூரிக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்துடன் வந்து சேர்க்கைப் பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Powered by Blogger.