சித்த மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பங்களை பெற ஜூலை 30 கடைசி
சித்த மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெற புதன்கிழமை (ஜூலை 30) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 14 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசின் அனுமதியும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அனுமதியையும் ஒரு சேர பெற்ற அரசு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்காக இந்த விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இதுவரை 3,525 விண்ணப்பங்கள் விநியோகிக்கப் பட்டுள்ளன. இவற்றில் 2,500 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. ஜூலை 30-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். ஜூலை 31 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வந்து சேரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. கடைசி நாளுக்கு முன்பாகவே அனுப்பப்பட்டு அஞ்சல் துறை அல்லது கொரியர் நிறுவனத்தின் தாமதத்தினால் வரும் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தேர்வுக் குழு உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 14 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசின் அனுமதியும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அனுமதியையும் ஒரு சேர பெற்ற அரசு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்காக இந்த விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இதுவரை 3,525 விண்ணப்பங்கள் விநியோகிக்கப் பட்டுள்ளன. இவற்றில் 2,500 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. ஜூலை 30-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். ஜூலை 31 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வந்து சேரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. கடைசி நாளுக்கு முன்பாகவே அனுப்பப்பட்டு அஞ்சல் துறை அல்லது கொரியர் நிறுவனத்தின் தாமதத்தினால் வரும் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தேர்வுக் குழு உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
No comments: