Header Ads

Breaking News
recent

ஐடிஐ படித்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு


ஐடிஐ படித்த இளைஞர்கள் வெளிநாட்டில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கா. சண்முகசுந்தர் வெளியிட்ட செய்திக் குறிப்பு அபுதாபியிலுள்ள ஒர் முன்னணி நிறுவனத்திற்கு ஐடிஐ தேர்ச்சியுடன் 6 ஆண்டுகள் அனுபவம் பெற்ற சட்டரிங் கார்பெண்டர்கள், ஸ்டீல் பிக்ஸ்சர்கள், ஏசி டெக்னிசியன்கள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்ற உதவி சட்டரிங் கார்பெண்டர்கள், உதவி ஸ்டீல் பிக்ஸ்சர்களுக்கான நேர்முகத்தேர்வு தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெற உள்ளது.
 தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான பயணச்சீட்டு, இருப்பிடம், உணவு வசதி, மருத்துவ காப்புறுதி, மிகைநேர பணி ஊதியம் ஆகியவை வெளிநாட்டு வேலையளிப்போரல் வழங்கப்படும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள், ஒரிஜனல் பாஸ்போர்ட் மற்றும் நீலநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட மூன்று புகைப்படத்துடன் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், எண்.42, ஆலந்தூர் ரோடு, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) காலை 8.30 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு நேரில் செல்ல வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.