காலியாகவுள்ள பேராசிரியர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சர் பழனியப்பன்
தமிழகத்தில், அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள பேராசிரியர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அனைத்து பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் போது, திண்டுக்கல் மகளிர் கலைக்கல்லூரியிலுள்ள காலி இடங்களும் நிரப்பப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
வைகையில் தூர்வாரும் பணி எப்போது தொடங்கும் என ஃபார்வர்டு பிளாக் கட்சியின் உறுப்பினர் கதிரவன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விரைவில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
சென்னை நகரின் எல்லையிலுள்ள இரட்டை ஏரி சுற்றுலா தலமாக மாற்றப்படுமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சவுந்திரராஜன் கேட்தற்குப் பதிலளித்த அமைச்சர் பன்னீர்செல்வம், ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பிறகு அதற்கான பணிகள் தொடங்கும் என கூறினார். திருப்பதி சாலையிலுள்ள கொஸஸ்தலை ஆற்றில் புதிய தடுப்பணை அமைப்பது தொடர்பாக, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
அனைத்து பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் போது, திண்டுக்கல் மகளிர் கலைக்கல்லூரியிலுள்ள காலி இடங்களும் நிரப்பப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
வைகையில் தூர்வாரும் பணி எப்போது தொடங்கும் என ஃபார்வர்டு பிளாக் கட்சியின் உறுப்பினர் கதிரவன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விரைவில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
சென்னை நகரின் எல்லையிலுள்ள இரட்டை ஏரி சுற்றுலா தலமாக மாற்றப்படுமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சவுந்திரராஜன் கேட்தற்குப் பதிலளித்த அமைச்சர் பன்னீர்செல்வம், ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பிறகு அதற்கான பணிகள் தொடங்கும் என கூறினார். திருப்பதி சாலையிலுள்ள கொஸஸ்தலை ஆற்றில் புதிய தடுப்பணை அமைப்பது தொடர்பாக, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
No comments: