தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மேலாண்மை குழும உறுப்பினராக டி.ஜெயக்குமார் தேர்வு
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மேலாண்மை குழும உறுப்பினராக ராயபுரம் எம்.எல்.ஏ. டி.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அவரைத் தவிர வேறு யாரும் வேட்புமனு செய்யாத காரணத்தால், மீன்வள பல்கலைக்கழக மேலாண்மை குழும உறுப்பினர் பதவிக்கு அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவியில் அவர் மூன்று ஆண்டுகள் பொறுப்பு வகிப்பார் என பேரவைத் தலைவர் பி.தனபால் வியாழக்கிழமை அறிவித்தார்.
No comments: