Friday, June 13 2025

Header Ads

திருவிக கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் திருவிக அரசுக் கலைக் கல்லூரியில் 2014-2015 ம் கல் வி யாண்டு மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்து ள்ளார் கல்லூரி முதல்வர் . விஸ்வலிங்கம்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிகழ் கல்வியாண்டுக்கான பி.., பிஎஸ்சி., பிகாம்., பிபிஏ ஆகிய இளநிலைப் பட்ட வகுப்புக்கு மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது நிரப்பப்படாமல் காலியாகவுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்ஸôமியர் பிரிவு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே விண்ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்காதவர்கள், இடம் கிடைக்காதவர்கள், கடந்த முறை விண்ணப்பித்து தவறியவர்கள், துணைத் தேர்வு எழுதிய தற்போது தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை 14-ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.


எம்.., எம்.எஸ்.சி, எம்.காம் ஆகிய முதுநிலைப் பாடபிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கா விண்ணப்பங்கள் கல்லூரியில் வழங்கப்படுகிறது. ஆய்வியல் நிறைஞர் படிப்புக்கு இக்கல் லூரியில் சேர பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம்

No comments:

Powered by Blogger.