Header Ads

Breaking News
recent

கோவை அரசு தொழிநுட்பக் கல்லூரியில் எம்.சி.ஏ படிப்பிற்கான கலந்தாய்வு

கோவை அரசு தொழிநுட்பக் கல்லூரியில் எம்.சி.ஏ படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று சிறப்புப் பிரிவின் கீழ் மாற்றுத்திறனாளிகள் 14 பேர் கலந்தாய்வில் கலந்துகொண்டனர். வரும் 28ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்விற்காக 3,782 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வருடம் முதல் பெரியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் பல்கலைக்கழகம், சென்னை மற்றும் மதர் தெரசா பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. பயில விரும்புவர்களும் கோவையில் நடைபெறும் கலந்தாய்விலேயே பங்கேற்கவுள்ளனர். எம்.சி.ஏவை அடுத்து எம்.பி.ஏ கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் எம்.சி.ஏ படிப்பதற்கு டேன்செட் நுழைவுத் தேர்வு மட்டுமின்றி, கவுன்சிலிங்கில் பங்கேற்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.