தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் 13–ந்தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் 2014–15–ம் கல்வி ஆண்டுக்கான பட்டப்படிப்புக்கான மாணவ–மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது.
இந்த மாணவர்கள் சேர்க்கையின் சில பாடப்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 13–ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது.
இதனை மாணவ– மாணவிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் பாஸ்கரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments: