ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்ற கண் பார்வையற்ற பெண்ணுக்கு பாராட்டு விழா
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பினோ ஜீபினி(வயது 27). கண் பார்வையற்றவரான இவர், கடந்த ஆண்டு நடந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து வில்லிவாக்கம் அரிமா சங்கம் சார்பில் வில்லிவாக்கம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பினோ ஜீபினிக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.
விழாவில் பினோ ஜீபினியை பாராட்டி அவருக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அரிமா சங்க நிர்வாகிகள் ஜி.எம்.பாலாஜி ரத்தினம், ஜி.எம்.குணராஜா, மதனகோபால் ராவ், நந்தகோபால், சுகுமார், மாநகராட்சி கவுன்சிலர் தேவஜவகர், பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.சி.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பினோ ஜீபினியை பாராட்டி பேசினர். இதில் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் பினோ ஜீபினியை பாராட்டி அவருக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அரிமா சங்க நிர்வாகிகள் ஜி.எம்.பாலாஜி ரத்தினம், ஜி.எம்.குணராஜா, மதனகோபால் ராவ், நந்தகோபால், சுகுமார், மாநகராட்சி கவுன்சிலர் தேவஜவகர், பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.சி.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பினோ ஜீபினியை பாராட்டி பேசினர். இதில் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments: