Header Ads

Breaking News
recent

அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.

மதுரை காமராஜ் பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் முத்துமாணிக்கம் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசுகையில், "இந்த சமுதாயத்தில் தரமான கல்வியை அளிப்பதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியம். தரமான கல்வி என்பது ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு அறிவு வளர்ப்பது, அறிவு திறனை வெளிப்படுத்துவது, கல்வி தரத்தை உயர்த்துவதாகும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். ஏட்டுக்கல்வி மட்டும் பயிலாமல் வாழ்க்கைக்கு தேவையான கல்வி சார்ந்த அனுபவங்களையும் சேர்ந்து பயிற்று விக்க வேண்டும்" என்றார். முன்னதாக, மாணவர்கள் பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

No comments:

Powered by Blogger.