தில்லி பல்கலைக்கழகத்தில் திருநங்கைகள் படிக்க அனுமதி
தில்லி பல்கலைக்கழகத்தில், இந்தாண்டு முதல் முதுகலை படிப்பில் திருநங்கைகள் படிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
இப்பல்கலைக்கழகத்தில், இளங்கலை, முதுகலை, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் ஆகிய படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தாண்டு முதல் முதுகலை பட்டப் படிப்பில் திருநங்கைகளை அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அடுத்த கல்வி ஆண்டில் இளங்கலை பட்டப் படிப்பிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களில் மூன்றாவது பாலினம் என்ற ஒரு இடத்தை அறிமுகப்படுத்தி ஓபிசி இடஒதுக்கீட்டின் ஒரு சிறப்புப் பிரிவில் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
இப்பல்கலைக்கழகத்தில், இளங்கலை, முதுகலை, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் ஆகிய படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தாண்டு முதல் முதுகலை பட்டப் படிப்பில் திருநங்கைகளை அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அடுத்த கல்வி ஆண்டில் இளங்கலை பட்டப் படிப்பிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களில் மூன்றாவது பாலினம் என்ற ஒரு இடத்தை அறிமுகப்படுத்தி ஓபிசி இடஒதுக்கீட்டின் ஒரு சிறப்புப் பிரிவில் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
No comments: