புதுவை கதிர்காம அரசு மருத்துவக்கல்லூரி குப்புகள் தொடக்க நிகழ்ச்சி தள்ளிவைப்பு
புதுவை கதிர்காமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை சென்டாக் கலந்தாய்வு மூலம் நடந்தது.
இந்த கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் நேற்று தொடங்குவதாக இருந்தது. தொடக்க நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை ஆணை வழங்குவார் என்று கூறப்பட்டது.
ஆனால் இந்த வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று திடீரென தள்ளிவைக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் மாணவ, மாணவிகளுக்கு சரியாக போய்ச்சேராததால் பெரும்பாலான மற்ற பிராந்தியங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் புதுச்சேரிக்கு வந்துவிட்டனர். இங்கு வந்தபின்பு விஷயம் தெரியவரவே அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே அவர்களிடம் வகுப்புகள் நாளை (புதன்கிழமை) முதல் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் நேற்று தொடங்குவதாக இருந்தது. தொடக்க நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை ஆணை வழங்குவார் என்று கூறப்பட்டது.
ஆனால் இந்த வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று திடீரென தள்ளிவைக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் மாணவ, மாணவிகளுக்கு சரியாக போய்ச்சேராததால் பெரும்பாலான மற்ற பிராந்தியங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் புதுச்சேரிக்கு வந்துவிட்டனர். இங்கு வந்தபின்பு விஷயம் தெரியவரவே அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே அவர்களிடம் வகுப்புகள் நாளை (புதன்கிழமை) முதல் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments: