Header Ads

Breaking News
recent

கனடா பல்கலையுடன் மகாலட்சுமி நர்ஸிங் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கனடா நாட்டு பல்கலைக்கழகத்துடன் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி நர்சிங் கல்லூரி சனிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

கனடா நாட்டின் செயின் குளோரி கல்லூரியின் பேராசிரியை ரூத் சூடன் மற்றும் பேராசிரியர் செல்வா ஆகியோர் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் நர்சிங் கல்லூரி மற்றும் பயிற்சி பள்ளியின் செயலாளர் பாலாஜி லோகநாதன் ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இங்கு படிக்கும் மாணவிகள் கடைசி செமஸ்டரில் அங்கு படிப்பதற்கும் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் ஆண்டுக்கு இரு முறை அங்குள்ள பேராசிரியர்கள் இக்கல்லூரிக்கு வந்து வகுப்பு எடுப்பார்கள்.

இந்நிகழ்ச்சியின்போது கல்லூரியின் செயலாளர் சாந்தி, நர்சிங் கல்லூரி முதல்வர் ஐவிலினா, மெட்ரிக் பள்ளியின் முதல்வர் கே.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Powered by Blogger.