உதவி அரசு வழக்கறிஞர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.
உதவி அரசு வழக்கறிஞர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு பொதுப்பணியில் அடங்கிய உதவி அரசு வழக்கறிஞர்(நிலை 2)பதவியில் 90 காலிப்பணியிடத்துக்கு, கடந்த ஆண்டு ஏப்ரல் 27, 28ம் தேதிகளில் எழுத்துத் தேர்வும், கடந்த ஜூலை 31, ஆக 1ம்தேதி நேர்காணல் தேர்வும் நடத்தப்பட்டது.விண்ணப்பதாரர் எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட தேர்வு பட்டியல் தேர்வாணைய இணையதளம்www.tnpsc.gov.in மற்றும் தேர்வாணைய அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments: