Thursday, June 12 2025

Header Ads

நாயக்கன்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மதுரையை அடுத்த அலங்காநல்லூர் அருகே கோவில்குட்டி நாயக்கன்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி விழா நடந்தது. இதனை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஹேமலதா தலைமை வகித்து தொடங்கி வைத்து பார்வையிட்டார். 

ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், வட்டார வள மேற்பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை கஸ்தூரி வரவேற்றார். நிகழ்ச்சியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் புகழேந்தி, துணைத்தலைவர் மாசிலாமணி மற்றும் ஆசிரியர்–ஆசிரியைகள், பெற்றோர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர். இதில் மாணவ மாணவிகளின் படைப்புகளை பார்வையிட்டு பொதுமக்கள் பாராட்டினர்.

No comments:

Powered by Blogger.