Header Ads

Breaking News
recent

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சுதந்திர தின விழா

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (வெள்ளிக் கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோட்டிலும் சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெறுகிறது.

விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழும், சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சிகளும், பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

No comments:

Powered by Blogger.