பி.எஸ்.சி நர்சிங் மற்றும் டி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங் மற்றும் டி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வருகிறது.
போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று நிறைவடைந்தது. இதனையடுத்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது. 2 அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 90 இடங்களுக்கு, 578 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, 51 சுயநிதி கல்லூரிகளில் ஆயிரத்து 285 இடங்கள் காலியாக உள்ளதாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதனிடையே டி.பார்ம் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது. 3 அரசுக்கல்லூரிகளில் காலியாக உள்ள 240 இடங்களுக்கு ஆயிரத்து 25க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், டிப்ளமோ நர்சிங் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது.
போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று நிறைவடைந்தது. இதனையடுத்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது. 2 அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 90 இடங்களுக்கு, 578 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, 51 சுயநிதி கல்லூரிகளில் ஆயிரத்து 285 இடங்கள் காலியாக உள்ளதாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதனிடையே டி.பார்ம் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது. 3 அரசுக்கல்லூரிகளில் காலியாக உள்ள 240 இடங்களுக்கு ஆயிரத்து 25க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், டிப்ளமோ நர்சிங் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது.
No comments: