Thursday, June 12 2025

Header Ads

மார்த்தாண்டம், இம்மானுவேல் அரசர் கல்வியியல் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி

மார்த்தாண்டம், நட்டாலம் இம்மானுவேல் அரசர் கல்வியியல் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில்  போதகர் நேசமணி  ஜெபம் செய்தார். கல்லூரி தாளாளர்  சகிலா சாந்த குமாரி குத்து விளக்கேற்றினார். பேராசிரியை அனிதா வரவேற்று பேசினார். கல்லூரி நிறுவனர் டாக்டர். சாமுவேல் ஜார்ஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் ஒரு ஆசிரியராக இருந்து, இந்திய நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தவர். அவரை முன் மாதிரியாக கொண்டு செயல்படுமாறும் கூறினார் 

நிகழ்ச்சியில், நிர்வாக அதிகாரி  பென்சாம், பேராசிரியர்கள் சுனிதா,  வினிலா ஆகியோர் புத்தாக்கப் பயிற்சி அளித்தனர். முடிவில், பேராசிரியர் அஜிதா குமாரி நன்றி  கூறினார். பேராசிரியை ஹேமலின் சுபலா நிகழ்களை தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகள்  கல்லூரி முதல்வர்  கலா வின்சிலா செய்திருந்தார்.

No comments:

Powered by Blogger.