மாற்றுத்திறனாளிகளுக்கான துணை மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழக சுகாதாரத் துறையின் இணையதளத்தில் கலந்தாய்வுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்சி நர்ஸிங், பி.பார்ம், பி.ஏ.எஸ்.எல்.பி. (பேச்சுப் பயிற்சி படிப்பு), பிபிடி (பிஸியோதெரபி), பிஓடி (ஆக்குபேஷனல் தெரபி), பி.எஸ்சி ரேடியாலஜி - இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்ஸி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி.கார்டியோ பல்மோனரி பர்ஃப்யூஷன் டெக்னாலஜி (இதய- நுரையீரல் கருவி தொழில்நுட்பப் படிப்பு) ஆகிய எட்டு படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகின்றது.
முதல் நாளான ஆகஸ்ட் 18-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறும். 19-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் மாணவர்களுக்குத் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், செயலாளர், தேர்வுக்குழு என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்கதாக, ரூ. 200-க்கான வரைவோலை எடுக்க வேண்டும். வரைவோலை இல்லாத மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். முதல்கட்டக் கலந்தாய்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments: