மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய பொருளாதார பயிலரங்கம்
மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய பொருளாதார பயிலரங்கம் |
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் பொருளாதாரத் துறை, மேலாண்மைப் பள்ளி சார்பில் உயர் கல்வி மற்றும் வளரும் பொருளாதாரங்களில் நீடித்த வளர்ச்சி என்ற தலைப்பில் தேசிய பயிலரங்கம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
பொருளாதாரத் துறை தலைவர் டாக்டர் பி.முத்தையன் வரவேற்று, பயிலரங்க நோக்கம் குறித்து விவரித்தார். மேலாண்மைப் பள்ளி டீன் ஆர். பிரபாகர ராயா தலைமை தாங்கினார்.
துணைவேந்தர் டாக்டர் பி.சந்திரா கிருஷ்ணமூர்த்தி பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். ஐதராபாத் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் பி.காமையா சிறப்புரை ஆற்றினார். உதவிப் பேராசிரியர் ஆர்.லுசோம் நன்றி கூறினார்.
கல்வி, சுகாதாரம், உலகத் தரம் வாய்ந்த பலக்லைக்கழகங்களின் தகுதிகள், உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், அணுகுமுறைகள், கல்வி, சுற்றுச்சூழல், உயர்கல்வி, திட்டமிடல், உயர்கல்வித்துறையில் பிரச்னைகள், சவால்கள் என்ற தலைப்பில் பயிலரங்கில் கருத்துரை ஆற்றினர்.
பின்னர் நடந்த நிறைவு விழாவில் உதவிப் பேராசிரியர் டாக்டர் ஏ.சங்கரன் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக கலைப்பள்ளி முன்னாள் தலைவர் கே.இளங்கோ நிறைவுரை ஆற்றினார். தமிழ்ச் சங்க நிர்வாகி பி.சிவக்கொழுந்து சிறந்த கட்டுரைகள் சமர்ப்பித்தவர்களுக்கு பரிசளித்தார்.
நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற நிறைவு விழாவில்
nice
ReplyDeletebest
ReplyDelete