கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணினித் துறை மாணவர் குழு தொடக்க விழா
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணினித் துறை மாணவர் குழு தொடக்க விழா டைபாக்கோர் கட்டடத்தில் துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது. மாணவர் குழுத் தலைவர் சசிகுமார் வரவேற்றார். துறைத் தலைவர் டாக்டர் தேவராஜ், கடந்த ஆண்டின் குழு செயல்பாடுகள் குறித்தும், நடப்பு ஆண்டு திட்டங்கள் குறித்தும் விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், இந்த ஆண்டு மருத்துவ கம்ப்யூட்டிங், இணைய பாதுகாப்பு மற்றும் மொபைல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும் என்றார்.
துணை வேந்தர் டாக்டர் சரவணசங்கர் பேசுகையில் கூறியதாவது: நெட்வொர்க் குறித்த சிறந்த வசதிகள் இந்தியாவில் அனைத்து நிறுவனங்கள் மத்தியில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தான் உள்ளது. எனவே மாணவர்கள் நெட்வொர்க் பாதுகாப்பு பயிற்சி எடுத்து மேலும் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுத வேண்டும் என்றார்.
மாணவர் குழு துணைத் தலைவர் கிருஷ்ணா சர்மா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
துணை வேந்தர் டாக்டர் சரவணசங்கர் பேசுகையில் கூறியதாவது: நெட்வொர்க் குறித்த சிறந்த வசதிகள் இந்தியாவில் அனைத்து நிறுவனங்கள் மத்தியில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தான் உள்ளது. எனவே மாணவர்கள் நெட்வொர்க் பாதுகாப்பு பயிற்சி எடுத்து மேலும் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுத வேண்டும் என்றார்.
மாணவர் குழு துணைத் தலைவர் கிருஷ்ணா சர்மா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments: